தமிழ் சினிமாவில் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் பயில்வான் ரங்கநாதன்.
அது மட்டுமின்றி, சினிமா விமர்சகராகவும், பத்திரிகையாளராகவும் இருந்து வருகிறார்.
அடிக்கடி சர்ச்சையான விஷயங்களையே டார்கெட் செய்து பேசி வரும் இவர் தற்போது விஜய் தலையிலேயே கை வைத்துள்ளார்.
தளபதி விஜய் விதவிதமான விக் வைத்து படகங்ளில் நடித்து வருவதாக கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.
இதனால் கடுப்பான, தளபதியின் ஆருயிர் ரசிகர்கள்… பாரபச்சம் பார்க்காமல், பயில்வானை சமூக வலைத்தளத்தில் பிரிந்து மேய்ந்து வருகிறார்கள்.
குறிப்பாக பயில்வானின் இந்த பேச்சுக்கு சில பிரபலங்களும் பொங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
பயில்வானுக்கு எதிராக பல விமர்சனங்கள் வந்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல இஷ்டத்துக்கு பேசி வருகிறார் இவர்.