Site icon Tamil News

சாந்தனுவின் 8 வருட பிரேக் அப் சீக்ரெட்

இயக்குனர் பாக்யராஜின் மகனாக வாரிசு நடிகர் என்ற அடையாளத்தோடு அறிமுகமான சாந்தனு இன்னும் வளர்ந்து வரும் ஒரு நடிகராகவே இருக்கிறார்.

பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவர் தனக்கான ஒரு வெற்றிக்காக போராடி வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் நடிப்பில் வெளிவந்துள்ள ராவண கோட்டம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்நிலையில் அவர் தன்னுடைய எட்டு வருட பிரேக் அப் பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார்.

அதாவது பிரபல தொகுப்பாளினியாக இருக்கும் கீர்த்தியும் இவரும் சிறு வயதிலிருந்து நண்பர்களாக பழகி பின் காதலிக்க ஆரம்பித்தது அனைவருக்கும் தெரியும்.

அதைத்தொடர்ந்து இவர்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

அது மட்டுமல்லாமல் இயல்பாகவே ஒரு பொசசிவ் குணமும் அவருக்கு இருந்திருக்கிறது. அதனால் கீர்த்தி பத்ரகாளி அவதாரம் எடுத்திருக்கிறார்.

மேலும் இந்த விஷயத்தை பெரிதுபடுத்தி இருவரும் மன நிம்மதி தான் முக்கியம் என்று பிரேக்கப் செய்து பிரிந்து விட்டார்களாம்.

இப்படி 8 வருடம் கழிந்த நிலையில் அவ்வப்போது ஹாய், பாய் சொல்வதோடு அவர்களின் நட்பு தொடர்ந்திருக்கிறது.

அப்பொழுதுதான் ஒரு முறை டான்ஸ் ஷோவுக்காக ரிகர்சல் செய்த போது இவர்களுக்குள் மீண்டும் காதல் பற்றி இருக்கிறது.

ஏனென்றால் அப்போது அவர்களின் நண்பர்கள் கமலின் பாடல்களை போட்டு உற்சாகப்படுத்தி இருக்கிறார்கள்.

அதன் பிறகு தான் மீண்டும் இவர்கள் காதலிக்க ஆரம்பித்து திருமணம் செய்து கொண்டார்களாம். இந்த ரகசியத்தை சாந்தனு இப்போது வெளிப்படையாக தெரிவித்து இருப்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது.

Exit mobile version