Site icon Tamil News

பிரான்ஸில் வாய்த்தர்க்கத்தால் நேர்ந்த விபரீதம்

பிரான்ஸில் வாய்த்தர்க்கத்தால் கத்திக்குத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இரு நபர்களுக்கு இடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கம் ஒன்று கத்திக்குத்தில் சென்று முடிந்துள்ளது.

படுகாயமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Place du Caquet (Saint-Denis) பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி அளவில் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரு நபர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து, அவர்களில் ஒருவர் மற்றைய நபரை கத்தியால் குத்தியுள்ளார்.

காயமடைந்த நபர் Bichat மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தாக்குதல் நடத்திய நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். மோதலுக்குரிய காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

Exit mobile version