Site icon Tamil News

அமெரிக்காவில் காதலி எடுத்த முடிவு… காதலன் செய்த கொடூர செயல்!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கருக்கலைப்பு செய்துகொள்ள இன்னொரு மாகாணத்திற்கு சென்ற காதலியை காதலன் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த நபரை கைது செய்துள்ள டல்லாஸ் பொலிஸார், கொலை வழக்கில் சிறையில் அடைத்துள்ளனர். டெக்சாஸ் மாகண நிர்வாகம் கடந்த 2021 செப்டம்பர் மாதத்தில் இருந்து கருவுற்று ஆறு வாரங்களுக்குப் பிறகு கருக்கலைப்பு செய்துகொள்ள தடை விதித்திருந்தது.

ஆனால் மருத்துவ அவசரம் கருதி கருக்கலைப்பு விவகாரத்தில் விதிவிலக்கும் அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 26 வயதான கேப்ரியல்லா கோன்சலஸ் தமது காதலன் 22 வயதான ஹரோல்ட் தாம்சன் என்பவருடன் டல்லாஸ் பார்க்கிங் பகுதியில் விவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

ஒருகட்டத்தில் தமது காதலியை மூச்சுத்திணறடிக்க முயன்றுள்ளார் ஹரோல்ட் தாம்சன். முந்தைய நாள் இரவு தான் கேப்ரியல்லா கொலராடோவிலிருந்து திரும்பியிருந்தார் என கூறப்படுகிறது.

தமது காதலி கருக்கலைப்பு செய்துகொள்ள முடிவு செய்துள்ளதை ஹரோல்ட் தாம்சன் ஏற்கவில்லை என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில் கண்ணிமைக்கும் நேரத்தில் தாம்சன் துப்பாக்கியை வெளியே எடுத்து, கேப்ரியல்லாவின் தலையில் சுட்டுள்ளார்.இதில் சுருண்டு விழுந்த அவரை பலமுறை துப்பாகியால் சுட்டுவிட்டு சம்பவயிடத்தில் இருந்து தாம்சன் மாயமாகியுள்ளார். ஆனால் டல்லாஸ் பொலிஸார் புதன்கிழமை அவரை கைது செய்துள்ளதுடன், கொலை வழக்கு சுமத்தி சிறையிலும் அடைத்தது.

Exit mobile version