Site icon Tamil News

மின்சார சபையின் தொழிற்சங்க தலைவர்கள் குழுவிற்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் பிறப்பித்த உத்தரவு!

மின்சார சபையின் தொழிற்சங்க தலைவர்கள் குழுவிற்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரஞ்சன் ஜெயலால் உள்ளிட்டோர் ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை மற்றும் கோல்பேஸ் கிரீன் வளாகத்திற்குள் நுழைவதை தவிர்க்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்சார சபையை தனியார் மயமாக்கப் போவதாக அதன் தொழிற்சங்கங்கள் எதிர்ப்புப் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளன.

அதன்படி, இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டம் மூன்றாவது நாளாகவும் இன்று (05.01) நடைபெறவுள்ளது.

இலங்கை மின்சார சபையின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

Exit mobile version