Site icon Tamil News

நுவரெலியா மாவட்டத்திற்கு மண்சரிவு எச்சரி்க்கை விடுப்பு!

மாத்தளை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இதன்படி, இந்த 3 மாவட்டங்களுடன், நாடளாவிய ரீதியில் 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாத்தளை மாவட்டத்தில் உக்குவெல, ரத்தோட்டை மற்றும் மாத்தளை ஆகிய பகுதிகளுக்கு நேற்று (12.10) முதல் முறையாக மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேசத்திற்கும்,  மேலும், கண்டி மாவட்டத்தின் பாததும்பர பிரதேசத்திற்கும் முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version