Site icon Tamil News

நாடாளுமன்றத்தில் டெண்டர் மாஃபியா தொடர்பில் வெளியான தகவல்

தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபையின் அதிகாரியொருவரினால் மேற்கொள்ளப்பட்ட டெண்டர் மாஃபியா தொடர்பான விடயங்கள் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது, சம்பந்தப்பட்ட அதிகாரி தனக்கு நட்பான நிறுவனங்களுக்கு மட்டுமே டெண்டர் கொடுப்பதாக கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பதிலளித்துள்ளார்.

அதற்கு சற்று முன்னர் குறித்த அதிகாரி திறமையான அதிகாரி என முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

எனவே, நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோரின் கருத்துக்களில் முரண்பாடு காணப்படுவதால், சரியான தகவல்களை வழங்க வேண்டுமென சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

Exit mobile version