Site icon Tamil News

பிரித்தானியாவில் இருந்து விரைவில் நாடு கடத்தப்படவுள்ள குழந்தை!

பிரித்தானியாவில் பிறந்த ஒரு குழந்தை புதிய விசா விதிமுறைகளின் கீழ் நாடுகடத்தப்படும் அபாயத்தில் இருப்பதாக அக் குழந்தையின் தந்தை தெரிவித்துள்ளார்.

ஒரு வயதும், ஒரு மாதமும் ஆகியுள்ள ஆசா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மிட்லாண்ட்ஸில் பிறந்தார்.

அவரது தந்தை ஜோர்டானில் இருந்து பிஎச்டி படிக்க வந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து அவரது பெற்றோர் இருவரும் சட்டப்பூர்வமாக பிரிட்டனில் வசித்து வருகின்றனர்.

அவர்கள் தங்கள் மகளுக்கு குழந்தை சார்ந்த விசாவிற்கு விண்ணப்பிக்க முயற்சித்துள்ளனர். ஆனால் இந்த மாதம், உள்துறை அலுவலகத்திலிருந்து தங்கள் மகள் “உடனடியாக இங்கிலாந்தை விட்டு வெளியேற வேண்டும்” என்று கடிதம் வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த குடும்பத்தினர் விடுமுறைக்காக வெளிநாடு ஒன்றுக்கு சென்ற நிலையில் அங்கு நீண்டகாலம் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இதுதான் தற்போது குழந்தை நாடுகடத்தப்படுவதற்கு காரணமாக கூறப்படுகிறது.

Exit mobile version