Site icon Tamil News

கெர்சனில் இருந்து துரிதமாக பொதுமக்களை வெளியேற்றும் உக்ரைன்!

கெர்சனின் தெற்குப் பகுதியில் ரஷ்யப் படைகள் தொடர்ந்து ஷெல் தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருவதால், பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து டெலிகிராமில் கருத்து தெரிவித்துள்ள, பிராந்திய கவர்னர் ஒலெக்சாண்டர் புரோகுடின், ரஷ்ய துருப்புக்கள் “கெர்சனில் மட்டுமல்ல, உக்ரைன் முழுவதும் ஷெல் தாக்குதல்களை அதிகரித்துள்ளன என்றும், உக்ரேனியர்கள், முழு குடும்பங்கள், குழந்தைகள் இறந்து கொண்டிருக்கிறார்கள்,”என்றும் பதிவிட்டுள்ளார்.

“கெர்சன் மக்கள் பாதிக்கப்படுவதை என்னால் அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்த அவர், பொதுமக்களை வெளியேற்றுவதற்கான வழிகளை வகுக்க” உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

Exit mobile version