Site icon Tamil News

3 முறை ஒரே எண்களை வைத்து அதிர்ஷ்டக் குலுக்கில் வெற்றிபெற்ற அமெரிக்கர்!

அமெரிக்காவின்  Maryland பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு தொடர் அதிஷ்டம் கிடைத்துள்ளது.

அவர் 11 மாதங்களில் அதே எண்களைக் கொண்ட அதிர்ஷ்டக் குலுக்குச் சீட்டை வாங்கி 3 முறை வெற்றி பெற்றுள்ளார்.

இம்முறை அவர் 50,000 அமெரிக்க டொலர் பரிசுத் தொகையை வென்றுள்ளார்.

52 வயதுடைய அந்த நபர் ஏப்ரல் 13 ஆம் திகதி நடந்த “Pick Five” எனும் அதிர்ஷ்டக் குலுக்கில் வென்ற பரிசுத் தொகையை அண்மையில் பெற்றார்.

வெற்றி பெற்ற எண்கள்: 4, 8, 5, 4 மற்றும் 8ஆகும். இதற்கு முன், அவர் 2 முறை 100,000 அமெரிக்க டொலர் பரிசுத் தொகையை வென்றவர்.

கடந்த ஆண்டு அடுத்தடுத்து வென்றேன். என் மனைவி மீண்டும் அதே எண்களை வைத்து விளையாடச் கூறினார். அதிர்ஷ்டம் மீண்டும் கதவைத் தட்டியது! என அவர் அதிர்ஷ்டக் குலுக்கை நடத்திய அதிகாரிகளிடம் கூறினார்.

அந்த நபரின் பெயர் வெளியிடப்படவில்லை.

வெற்றி பெற்ற தொகையைக்கொண்டு மனைவியுடன் வெளியூர்ப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும் அதிர்ஷ்டக் குலுக்கில் தொடர்ந்து விளையாடவிருப்பதாகவும் அவர் கூறினார்.

Exit mobile version