Site icon Tamil News

ஐரோப்பாவில் இலங்கையர்களுக்கு தொழில் பெற்று தருவதாக கூறி பெண் செய்த செயல்

ஐரோப்பிய நாடான போலந்தில் தொழில் பெற்று தருவதாக கூறி, 13 மில்லியன் ரூபாய் நிதி மோசடி செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய போது, சிக்கியதாக பொலிஸார் கூறியுள்ளார்.

அவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு எதிராக 53 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பத்தரமுல்ல பகுதியை சேர்ந்த 44 வயதுடைய பெண்ணே, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Exit mobile version