கடனை செலுத்த முடியாத இளைஞர் ஒருவர் தமது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஒன்று புதுக்குடியிருப்பு பகுதியில் பதிவாகியுள்ளது.
புதுக்குடியிருப்பு – கைவலி பகுதியைச் சேர்ந்த 24 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்ததாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் குறித்த நபரால் எழுதப்பட்டதாக கூறப்படும் கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.