Site icon Tamil News

வெள்ளவத்தையில் கால்பந்து போட்டியில் கடும் மோதல் – பலர் காயம்

வெள்ளவத்தையில் இடம்பெற்ற கால்பந்து போட்டியின் போது கடும் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலில் 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரு பாடசாலைகளுக்கிடையிலான கால்பந்து போட்டியின் போதே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version