Site icon Tamil News

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை

இஸ்லாமியர்களால் ஹஜ் பெருநாள் நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை மன்னாரில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மன்னார் மூர்வீதி ஜும்மா பள்ளிவாசலில் இன்றைய தினம் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகள் இடம் பெற்றது.காலை 6.45 மணிக்கு பெண்களுக்கும் காலை 7.30 மணியளவில் ஆண்களுக்கும் பெருநாள் தொழுகை இடம் பெற்றது.

இவ் தொழுகை மூர்வீதி ஜும்மா பள்ளிவாசலின் மௌலவி எம்.அஸீம் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது ஹஜ்ஜுப் பெருநாளின் முக்கியத்துவம், அல்குர்ஆன் சமய நற்சிந்தனைகள், பற்றியும் இங்கு எடுத்துக் கூறப்பட்டது.

மேலும் விசேடமாக துவா தொழுகைகள் இடம் பெற்றது.மேலும் மாவட்டத்தில் உள்ள ஏனைய பள்ளிவாசல்களிலும் பெருநாள் தொழுகைகள் சிறப்பாக இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version