Tamil News

இந்தியில் சூப்பர் ஹிட் படத்தின் 4ஆம் பாகத்தில் சூர்யா? அதுவும் வில்லனா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் சூர்யா இந்தி சினிமாவில் அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்தியில் சூப்பர் ஹிட்டான படத்தின் 4 ஆம் பாகத்தில் சூர்யா வில்லன் கேரக்டரில் நடிப்பார் என்று இந்தி திரையுலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் அடுத்த மாதம் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ரஜினி நடித்த வேட்டையன் திரைப்படம் அதே நாளில் ரிலீஸ் ஆகுவதால் கங்குவா படத்தின் வெளியீட்டை படக்குழுவினர் மாற்றியுள்ளனர். புதிய வெளியீட்டு தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை தொடர்ந்து சூர்யா இன்னும் பெயரிடப்படாத தனது 44 ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பேட்ட, ஜிகர்தண்டா 2 படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார்.

இந்நிலையில், இந்தி சினிமாவில் சூப்பர் ஹிட்டான தூம் படத்தின் 4 ஆம் பாகத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக பேசப்படுகிறது.

இந்தியில் இதுவரை தூம் படத்துடைய 3 பாகங்கள் வெளிவந்துள்ளன. 4 ஆம் பாகத்தை உருவாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ள நிலையில், அந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடிப்பதற்கு சூர்யாவிடம் பேசப்பட்டு வருகிறது.

சூரரை போற்று படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டபோது அதில் சூர்யா கெஸ்ட் ரோலில் இடம்பெற்றார். தூம் 4 படத்தின் மூலம் அவர் முறையாக இந்தி சினிமாவில் அறிமுகம் ஆகுவார் என்று இந்தி திரையுலகில் பேசப்படுகிறது.

Exit mobile version