நடிகர் சூர்யா இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தற்போது ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வருடத்தின் இறுதிவரை படப்பிடிப்பு நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
கங்குவா படத்தை தொடர்ந்து சூர்யா மாரி செல்வராஜின் இயக்கத்தில் வாடி வாசல் திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இதில் சிக்கல் எழுந்துள்ளது.
அதாவது மாரி செல்வராஜ் விடுதலை திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள். இந்த படம் கொடுத்த வெற்றியால் தற்போது இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக காட்சிகளை செதுக்கி வருகிறார் என்றே சொல்ல வேண்டும்.
ஆகவே வாடி வாசல் படத்தை எடுப்பதில் இழுப்பறி நிலை நீடிக்கும் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே சூர்யா, கங்குவா படத்தை தொடர்ந்து வெற்றிமாறனுக்காக காத்திருக்காமல், சுதா கொங்கராவுடன் புதிய படத்தில் இணைய இருக்கிறார்.
ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளியான சூரரைப் போற்று படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மீண்டும் இவர்கள் இணைய உள்ள செய்தி சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் ஜிவி பிரகாஷ் தான் இந்த படத்திற்கும் இசையமைக்க இருக்கிறாராம்.