Site icon Tamil News

இலங்கை அரசியல்வாதிகள் பின்னால் சுற்றி திரியும் அரச புலனாய்வு அதிகாரிகள்

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் எதிர்க்கட்சியில் இணைகிறார்களா என்பதை ஆராய்வதற்காக அரச புலனாய்வு அதிகாரிகள் இந்த நாட்களில் பாராளுமன்ற உறுப்பினர்களை பின்தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த அமைச்சர்கள் குழுவொன்று ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைவதற்கு எடுத்த தீர்மானங்கள் உள்ளதாக கூறப்படுகின்றது.

அவர்களில் யார் இணைகிறார்கள் என்பது குறித்து ஆராய்வதற்காக அவ்வப்போது புலனாய்வு அதிகாரிகள் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களை பின்தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

கட்சி மாறுவார்கள் என்று நினைக்காத பொதுஜன பெரமுன அரசியல்வாதிகள் பலர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவதற்கான இரகசியப் பேச்சுக்களை நடத்தி வருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையும் இவ்வாறான அரசியல்வாதிகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவருக்கு நெருக்கமான சிலருடன் மாத்திரம் கருத்துப் பரிமாற்றம் செய்வதால் புலனாய்வு அதிகாரிகள் உறுப்பினர் பின்னால் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Exit mobile version