Site icon Tamil News

இலங்கையில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பமான காலநிலையால் ஏற்பட்டுள்ள நெருக்கடி

இலங்கையில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பமான காலநிலை காரணமாக மக்களின் நாளாந்த நீர் பாவனை சுமார் 10 சத வீதம் அதிகரித்துள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனை தெரிவித்துள்ளது.

இதேவேளை, மக்கள் முடிந்தவரை தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதன் மூலம் நீண்டகாலத்துக்கு பிரச்சினையின்றி நீரை வழங்க முடியும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Exit mobile version