Site icon Tamil News

இலங்கையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலியவின் பிணை கோரிக்கை : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய தரமற்ற ஆன்டிபாடி தடுப்பூசிகளை கொள்வனவு செய்த சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மருத்துவ வழங்கல் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் கபில விக்கிரமநாயக்கவின் பிணை கோரிக்கையை எதிர்வரும் 30ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (26.04) உத்தரவிட்டுள்ளது.

இந்த கோரிக்கை தொடர்பான உத்தரவு இன்று அறிவிக்கப்பட இருந்தது.

ஆனால் இந்த உத்தரவுக்கான அறிவிப்பு இம்மாதம் 30ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டி. என். சமரகோன் உத்தரவிட்டார்.

 

Exit mobile version