Site icon Tamil News

இலங்கை அணியின் படுதோல்வி!!! உடன் பதவி விலகுமாறு விளையாட்டுதுறை அமைச்சர் கோரிக்கை

இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்விக்கான பொறுப்பை தெரிவுக்குழுவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனமும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த தோல்விகளுக்கு எந்த வீரரும் பொறுப்பேற்க முடியாது. 04 வருடங்களாக தெரிவுக்குழு மற்றும் முறைசாரா கிரிக்கட் செயற்குழு என்பனவற்றின் பொறுப்பை ஏற்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.

வீரர்களின் திறமையின் அடிப்படையில் நாட்டுக்கு கிடைத்த பணத்தை இலங்கை கிரிக்கெட் நிர்வாக குழு தொடர்ச்சியாக தவறாக பயன்படுத்துகிறது.

மற்ற நாடுகளில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு போன்று நவீன தொழில்நுட்ப மற்றும் அறிவியல் முறைகள் இல்லாததால் இந்த நாட்டில் விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து காயங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

போட்டித் தோல்விக்கு பொறுப்பேற்று இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழுவின் அதிகாரிகள் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version