Site icon Tamil News

சபாநாயகருக்கு ஐந்து பக்க கடிதம் ஒன்றை அனுப்பிய கஜேந்திரகுமார் எம்.பி

உரிமைகள் மற்றும் சலுகைகளை பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு ஐந்து பக்க நீண்ட கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ள அவர், இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.

தான் அண்மையில் கைது செய்தமை மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளின் போது தனது சிறப்புரிமைகள் மற்றும் உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த கடிதத்தில், இந்தக் கைதுக்குக் காரணமான சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நீண்ட விளக்கமொன்றை வழங்கியுள்ளார்

இது தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றையும் அவர் விடுத்துள்ளார். அதன் பின்னர், பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் பதில் அளித்தபோது காரசாரமான விவாதம் ஏற்பட்டது.

Exit mobile version