Site icon Tamil News

இலங்கை ஜனாதிபதி தேர்தல் – 4 மணிக்கு முன்னதாக வாக்களிக்குமாறு கோரிக்கை

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பை மாலை 4 மணிக்கு முன்னதாக மேற்கொள்ள வேண்டும் என அனுராதபுரம் மாவட்ட தேர்தல் அதிகாரி ரஞ்சித் விமலசூரிய தெரிவித்துள்ளார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அனுராதபுரத்தில் மிகவும் அமைதியான முறையில் வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றது.

636 வாக்குச் சாவடிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிவிட்டதாக அவர் கூறினார்.

அநுராதபுரம் மாவட்டத்தில் எவ்வித பிரச்சினையுமின்றி வாக்களிப்பு இடம்பெறும் என அநுராதபுரம் மாவட்ட தேர்தல் அதிகாரி ரஞ்சித் விமலசூரிய மேலும் தெரிவித்தார்.

Exit mobile version