Site icon Tamil News

இலங்கை அணியின் முன்னாள் வீரர் கொலை – துப்பாக்கிதாரி கைது

இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தம்மிக்க நிரோஷனாவை அவரது வீட்டிற்கு முன்பாக சுட்டுக் கொன்றதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

‘ஜோண்டி’ என அழைக்கப்படும் தம்மிக்க நிரோஷனாவை கொலை செய்ய மூன்று சந்தேகநபர்கள் வருகை தந்துள்ளதாகவும், ஏனைய இரண்டு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

48 வயதுடைய சந்தேகநபர் பலபிட்டிய ரண்டோம்பே பகுதியில் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் எனப்படும் 2800 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, சந்தேகநபர்கள் மாறுவேடமிட பயன்படுத்திய ஆடைகளை எல்பிட்டிய பிரதேச குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து பெற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Exit mobile version