Site icon Tamil News

இலங்கை ஜனாபதி தேர்தல் : எரிவாயு சிலிண்டரில் போட்டியிடும் ரணில்!

2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட  ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குச் சின்னமாக எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். வேலுகுமார், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கயாஷான் நாவந்தா, திகாமடுல்ல மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஸ்ரீயானி விஜேவிக்ரம, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குணசேகரம் சங்கர், ஐக்கிய மக்கள் கட்சியின் தலைவர் கலாநிதி சிறிமசிறி ஹப்புஆராச்சி ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து  தங்கள் ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளனர்.

Exit mobile version