Site icon Tamil News

இலங்கையில் உள்விவகாரங்கள் தொடர்பில் சர்வதேசம் விசாரணை நடத்த முடியாது!

இலங்கையின் உள்விவகாரங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்துவதற்கு உடன்பட முடியாது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இந்த நாட்டில் இவ்வாறான விசாரணைகளை மேற்கொள்வது சட்டவிரோதமானது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஞானார்த்த பிரதிபய நாளிதழின் ஆசிரியர் தலையங்கம் மற்றும் “சுதந்திரமான, வெளிப்படையான முழுமையான விசாரணை மற்றும் கண்காணிப்புக்கு சர்வதேச விசாரணைக் குழு தேவை” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி அறிக்கை மீதும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Exit mobile version