Site icon Tamil News

இலங்கை ஜனாதிபதி தேர்தல் : அதிகரிக்கும் விதிமுறை மீறல் முறைப்பாடுகள்!

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

இதன்படி நேற்றைய தினம் (19.08) 35 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அவை அனைத்தும் தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதில் 3 புகார்கள் தேசிய தேர்தல் புகார் மையத்துக்கும், மற்ற 32 புகார்கள் மாவட்ட தேர்தல் புகார் மையங்களுக்கும் கிடைத்துள்ளது.

இதேவேளை, கடந்த ஜூலை 31ஆம் திகதி தொடக்கம் இதுவரை 666 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் விதிகளை மீறியதாக 642 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

Exit mobile version