Site icon Tamil News

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: நாளை வெளியிடப்படும் அதிவிசேட வர்த்தமானி

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை அறிவிப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நாளை (26) வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இன்றையதினம் இடம்பெற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தின் போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி தேர்தல் திகதி, வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்படவுள்ள காலப்பகுதி உள்ளிட்ட விடயங்களை குறிப்பிட்டு இந்த விசேட வர்த்தமானி நாளையதினம் (26) வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Exit mobile version