Site icon Tamil News

இலங்கை முழுவதும் திடீர் மின்சார தடை: இலங்கை மின்சார சபை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

இலங்கை  நாடு முழுவதும் இன்று(09) மாலை திடீரென மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

திடீர் மின் தடை காரணமாக நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மின்சாரக் கட்டமைப்பில் திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் மின்சாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறை நிவர்த்தி செய்ய இலங்கை மின்சார சபை நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றது.

இந்நிலையில் தற்போது பல பகுதிகளில் மின்சாரம் வழமைக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவித்த இலங்கை மின்சார சபை, ஏனைய அனைத்துப் பகுதிகளுக்கும் மின்சார விநியோகத்தை மீள வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.

 

Exit mobile version