Site icon Tamil News

இலங்கை – கொழும்பு போர்ட் சிட்டியில் மருத்துவமனையை நிர்மாணிக்க முன்மொழிவு!

கொழும்பு போர்ட் சிட்டியில் ஒரு மருத்துவமனையை அபிவிருத்தி செய்வதற்கான தனியார் நிறுவனம் ஒன்று முன்மொழிவை சமர்ப்பித்துள்ளது. 100 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் இது செய்யப்பட உள்ளது.

தொடர்புடைய அமைச்சரவைப் பத்திரத்தின்படி, இந்த திட்டம் 2023 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகரத்தின் (விதிவிலக்குகள் அல்லது ஊக்குவிப்புகளை வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள்) விதிவிலக்குகள் அல்லது ஊக்குவிப்புகளுக்கு தகுதியுடையதாகும்.

வர்த்தமானியின் உத்தரவின் ஊடாக இந்த திட்டம் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த முதன்மை வணிகமாக அறிவிக்கப்பட்ட பின்னர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Exit mobile version