முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த மனுவில் தலையிடுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் இடைக்கால மனுவொன்றை சமர்ப்பித்துள்ளது.
பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் தன்னை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி கெஹலிய ரம்புக்வெல்ல மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் கெஹலிய ரம்புக்வெல்லவினால் முன்வைக்கப்பட்ட மனுவை நிராகரிக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இடைக்கால மனுவின் ஊடாக கோரியுள்ளது.