Site icon Tamil News

பொருளாதார நெருக்கடி குறித்து பாகிஸ்தான் பிரதமருடன் ஜனாதிபதி ரணில் விசேட சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், பாகிஸ்தான் பிரதமர் அன்வார் உல் ஹக் கக்கரும் இன்று (17) பிற்பகல் பெய்ஜிங்கில் பொருளாதார மீட்சிக்கான உத்திகள் குறித்து விசேட கவனம் செலுத்தி இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

பீஜிங்கில் இன்று (17) பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்களது சந்திப்பின் போது, இரு தலைவர்களும் பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளையும் பாதித்த பொருளாதார நெருக்கடிகள் குறித்து விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

Exit mobile version