Site icon Tamil News

ஹைட்டியில் கடத்தப்பட்ட ஆறு கன்னியாஸ்திரிகளும் பாதுகாப்பாக மீட்பு!

கடந்த வாரம் ஹைட்டியில் கடத்தப்பட்ட ஆறு கன்னியாஸ்திரிகள் மற்றும் இரண்டு பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று போர்ட்-ஓ-பிரின்ஸ் பேராயர் தி அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த குழுவினர் நேற்று (24.01) பிற்பகல் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  அனைவரும் நல்ல நிலையில் உள்ளனர் என்று பேராயர் மேக்ஸ் லெராய் மெசிடோர் கூறினார். எங்களுக்கு உதவிய கடவுளுக்கு நன்றி,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்து குழுவினரை மீட்பதற்கு பணம் கொடுக்கப்பட்டதா என்பது போன்ற விவரங்களை அவர் வெளியிடவில்லை.

புனித அன்னேயின் சகோதரிகள் சபையைச் சேர்ந்த கன்னியாஸ்திரிகள் மற்றும் இரண்டு இனந்தெரியாத நபர்கள் கடந்த வெள்ளிக்கிழமை போர்ட்-ஓ-பிரின்ஸில் பேருந்தில் பயணித்தபோது கடத்தப்பட்டதாக மதத் தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.

Exit mobile version