Site icon Tamil News

இஸ்ரேலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் சுட்டுக்கொலை

வடக்கு இஸ்ரேலின் அரபு நகரத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

அரபு நகரில் உள்ள வீடொன்றிற்குள் நுழைந்த இனந்தெரியாத குழுவினர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பின்னர் அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

இதன்போது பெண் ஒருவர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version