Site icon Tamil News

அமெரிக்காவில் இரு இந்திய மாணவர்கள் உயிரிழப்பு!

கடந்த ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி அமெரிக்காவிற்கு வந்த இரண்டு இந்திய மாணவர்கள், அமெரிக்காவின் கனெக்டிகட் மாநிலத்தின் ஹார்ட்ஃபோர்ட் நகரில் உள்ள அவர்களது அடுக்குமாடி குடியிருப்பில் இறந்து கிடந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டத்தைச் சேர்ந்த காட்டு தினேஷ் (22) என்ற மாணவரும், ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த  நிகேஷ் (21) என்பவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருவரும் ஹார்ட்ஃபோர்டில் உள்ள சேக்ரட் ஹார்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முதுகலைப் பட்டப்படிப்பை படித்து வந்துள்ளனர்.

இருவரும் இரவு உணவிற்கு பிறகு குடியிருப்பிற்கு சென்றதாக கூறப்படுகிறது. மறுநாள் காலை, அவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இறப்பிற்கான உடனடி காரணம் தெரியவில்லை என்றாலும், அப்பகுதியில் கடும் குளிர் நிலவுவதால், அவர்கள் அறையில் ஹீட்டர்களை அதிக அளவில் பயன்படுத்தியதால் கார்பன் மோனாக்சைடு விஷம் கலந்து இறந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version