Site icon Tamil News

கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் ; ஒருவர் பலி

கனடாவில் சீக்கிய தேவாலயம் ஒன்றின் எதிரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் சொல்லப்பட்டுள்ளார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் வான்கூவார் பகுதியில் நேற்று இரவு இந்த தாக்குதல் சம்பவம் இடம் பெற்றுள்ளது.குரு நானாக் குருத் துருவா என்னும் ஆலயத்திற்கு எதிரில் இந்த தாக்குதல் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த நபரின் ஆள் அடையாள விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.எனினும் சம்பவத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிய நபருக்கு முதலுதவிகளை வழங்கிய போதிலும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாகவும் தாக்குதல் சம்பவத்திற்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட சந்தேக நபர் அல்லது நபர்கள் தொடர்பிலான தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

Exit mobile version