Site icon Tamil News

பிரான்ஸில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு – ஐவர் காயம்

பிரான்ஸில் நேற்று முன்தினம் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஐவர் காயமடைந்துள்ளனர்.

லக்ஸம்பேர்க்கின் அருகே உள்ள பிரெஞ்சு எல்லைக் கிராமம் ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Villerupt (Meurthe-et-Moselle) நகரில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.

நபர் ஒருவர் நடத்திய சரமாரியான துப்பாக்கிச்சுட்டில் இரு பெண்கள், இரு ஆண்கள் மற்றும் ஒருவர் சிறுவன் என மொத்தம் ஐவர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் இருவர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் உலங்குவானூர்தி மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

போதைப்பொருள் கடத்தல் சம்பவத்துடன் மேற்படி துப்பாக்கிச்சூட்டுக்கு தொடர்பிருக்கலாம் என விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஜொந்தாமினர் தெரிவித்தனர்.

Exit mobile version