Site icon Tamil News

அமெரிக்காவில் உள்ள உயர்நிலை பள்ளியில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் உயரிழப்பு, பலர் காயம்!

அமெரிக்காவின் மத்திய மேற்கு மாநிலமான அயோவாவில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் மாணவர் ஒருவர் சக மாணவர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதுடன், மேலும் ஐந்து பேரை காயப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த துப்பாக்கிச்சூடு சம்பவமானது நேற்று (04.01) காலை 07.30 மணிக்கு இடம்பெற்றதாகவும், இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பொாலிஸார் விரைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசர வாகனங்கள் மற்றும் ஆயுதப் பிரிவுகள் பெர்ரி உயர்நிலைப் பள்ளிக்கு விரைந்ததுடன், வகுப்புகள் இன்னும் தொடங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவருக்கும் 11 அல்லது 12 வயதிருக்கலாம் என பொலிஸார் மதிப்பிட்டுள்ளனர்.  மேலும் தாக்குதலை மேற்கொண்ட 17 வயது மாணவர் தன்னைத் தானே தாக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகைள அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version