Tamil News

சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!! மாநகராட்சி பூங்காவில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட பெண்

சென்னையில் மாநகராட்சி பூங்காவில் பெண் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஜாபர்கான் பேட்டை திருநகர் வள்ளுவர் தெருவில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா உள்ளது. இதில் மாலை நேரத்தில் ஏராளமான பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று இரவு சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பூங்காவில் வந்து அமர்ந்திருந்தார்.பின்னர் திடீரென அந்த பெண்மணி பொதுமக்கள் யாரும் இல்லாத நேரத்தில் தான் கையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் பாட்டிலை எடுத்து உடல் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனால் தீயில் எரிந்தவாறு பெண் அங்கும் இங்கும் ஓடியதைப் பார்த்து பதறிபோன பொதுமக்கள் உடனே பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த எம்.ஜி.ஆர் நகர் பொலிஸார் எரிந்த நிலையில் கிடந்த பெண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ராயப்பேட்டை பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.முதற்கட்ட விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட பெண் அதே பகுதியைச் சேர்ந்த உஷா(55) என்பதும் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது ‌.

அரூப நெருப்பு: அன்றாடங்களில் படரும் கனல் | Read Book Reviews | Buy Tamil &  English Books Online | CommonFolks

மேலும் தினமும் தனது பேரக்குழந்தைகளை டியூசன் அழைத்து வரும் போது உஷா இந்த பூங்காவில் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் விட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.‌ தற்போது இவரது மகன் கேகே நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடிபெயர்ந்ததால் உஷாவும் தனது மகனுடன் வசித்து வந்துள்ளார்.‌

நேற்று உஷாவுக்கும், அவரது மகனுக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது ‌‌‌‌‌‌‌. இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான உஷா பெட்ரோலுடன் சென்று பூங்காவில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இருப்பினும் மனநலம் பாதிக்கப்பட்டதால் உஷா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது குடும்ப பிரச்சினை காரணமா தற்கொலை செய்து கொண்டாரா என பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்கள் அதிகமாக கூடும் மாநகராட்சி பூங்காவில் பெண் ஒருவர், பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version