Site icon Tamil News

இலங்கையில் அதிர்ச்சி – பெற்றோர் மீதான கோபத்தில் இளைஞன் செய்த செயல்

இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹரஸ்பெத்த பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலத்தை இராகலை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் இராகலை ஹரஸ்பெத்த பகுதியில் வசித்த மலிந்த தில்ஷான் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட மலிங்க தில்ஷான் தாய், தந்தையரை தாக்கி சண்டையிட்டு, எங்காவது சென்று உயிரை மாய்த்துகொள்ளதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பெற்றோர் தெரிவித்தனர்.

இதையடுத்து குறித்த இளைஞனின் பெற்றோர் இராகலை பொலிஸ் நிலையத்திற்கு சென்று தனது மகன் மது அருந்திவிட்டு தங்களை தாக்கிவிட்டு கோபத்தில் வீட்டைவிட்டு சென்றதாக முறைப்பாடு செய்துள்ளனர்.

அதேநேரத்தில் கோபத்தில் சென்ற மகன் வீட்டுக்கு வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் இருந்துள்ளதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இளைஞரின் வீட்டாருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அந்த அழைப்பில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் ஒன்று தர்பனா எல மலை அடிவாரத்தில் கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த தகவலை பெற்றோர் இராகலை பொலிஸ் நிலையத்திற்கு அறவித்துள்ளனர். பின்னர் தர்பனா எல மலை அடிவாரத்திற்கு விரைந்த இராகலை பொலிஸார் அங்கு உடல் பாகங்கள் சிதைந்து உயிரிழந்த நிலையில் இளைஞரின் சடலத்தை மீட்டுள்ளனர்.

அதேநேரத்தில் உயிரிழந்திருப்பது தமது மகன் என பெற்றோரும் சடலத்தை அடையாளம் காட்டியுள்ளனர்

Exit mobile version