Site icon Tamil News

மத்திய உக்ரைனில் ஷெல் தாக்குதல் : 6 பேர் உயிரிழப்பு!

மத்திய உக்ரைனில் நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக நகர மேயர் தெரிவித்துள்ளார்.

குறித்த ஷெல் தாக்குதலில் நான்கு மாடி கட்டடம் தீவிபத்திற்கு உள்ளானது. இதில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 19 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியாசலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

ஏறக்குறைய இரண்டரை டென்னிஸ் மைதானங்களின் அளவு – 700 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட அடுக்குமாடி கட்டிடத்தின் ஒன்று முதல் ஐந்து தளங்களில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

நகரின் மற்றொரு இடத்தில் மேலும் நான்கு பேர் காயமடைந்தனர், மொத்த இறப்பு மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

Exit mobile version