Site icon Tamil News

பிரான்ஸில் தண்டவாளத்தின் அருகே சடலம் – குழப்பத்தில் பயணிகள்

பிரான்ஸில் ரயில் நிலையத்தின் அருகே தண்டவாளத்தின் அருகில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளமையால் பயணிகள் குழப்பமடைந்துள்ளனர்.

Nanterre-Ville (Hauts-de-Seine) ரயில் நிலையத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திங்கட்கிழமை காலை பெண் பயணி ஒருவர் தொடர்புகொண்டு வழங்கிய தகவலை அடுத்து பொலிஸார் அழைக்கப்பட்டனர்.

குறித்த ஜ்ஜி நிலையத்தில் இருந்து 150 மீற்றர் தொலைவில் Rueil-Malmaison நிலையம் நோக்கிச் செல்லும் தண்டவாளத்தின் அருகே ஆண் ஒருவரது சடலம் கிடந்த நிலையில், சடலம் மீட்கப்பட்டு மருத்துவப் பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் வேறு இடத்தில் கொல்லப்பட்டு இங்கு வீசப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முகம் உள்ளிட்ட பல இடங்களில் வெட்டுக் காயங்கள் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Exit mobile version