Tamil News

Hot News; நடிகை ஷகீலா மீது சரமாரியாக தாக்குதல்..

திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஷகிலா. தமிழில் நடிகையாக அறிமுகமான இவர் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.

மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் மக்களிடையே பிரபலமானார். இந்த நிலையில், நடிகை ஷகிலா மீது தாக்குதல் என அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது மட்டுமின்றி பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஷகீலா தற்போது சென்னை கோடம்பாக்கம் பகுதியில் உள்ள யுனைடெட் இந்தியா காலனியில் வசித்து வருகிறார். நேற்று, ஷகீலா தனது வளர்ப்பு மகள் ஷீத்தலுடன் சூடான கருத்துப் பரிமாற்றம் செய்தார்.

பின்னர் இது சண்டையாக மாறியது. இதில் ஷீத்தலின் தாய் சசி, அவரது சகோதரி ஜமீலா உள்ளிட்டோர் இணைந்து ஷகிலாவை தாக்கியுள்ளனர் என கூறப்படுகிறது.

இதனால் ஷகீலா தரையில் விழுந்துள்ளார். முதற்கட்ட தகவலின்படி, குடும்ப பிரச்னை மற்றும் பண தகராறு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையில், ஷகீலா தன்னை உடல் ரீதியாக துன்புறுத்தியதாக ஷகீலா மீது ஷீத்தல் புகார் அளித்துள்ளார்.

நடிகை ஷகிலா தனது அண்ணன் மகளான ஷீத்தல் என்பவரை 6 மாத குழந்தையாக இருக்கும் போதிலிருந்து வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று நடிகை ஷகிலாவை அவரது வளர்ப்பு மகள் ஷீத்தல் கொடூரமாக தாக்கிவிட்டார் என ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.

இதன்பின், சமதானப்படுத்த சென்ற ஷகிலாவின் பெண் வழக்கறிஞர் அவரைகளையும், பலமாக தாக்கிவிட்டதாக போலீசாரிடம் அளிக்கப்பட்டுள்ள புகாரில் கூறப்பட்டுள்ளதாம். இதற்கான விசாரணை தற்போது நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version