Site icon Tamil News

உக்ரைன் ஏவிய 36 ஆளில்லா வானூர்திகள் ஒரே இரவில் சுட்டு வீழ்த்திய ரஷ்யா

தென்மேற்கு ரஷ்யாவின் சில பகுதிகளைக் குறிவைத்து இரவோடு இரவாக உக்ரேன் ஏவிய 36 ஆளில்லா வானூர்திகளை ரஷ்யாவின் வான் பாதுகாப்பு முறை அழித்துவிட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ரஷ்யா-உக்ரேன் எல்லையில் உள்ள குர்ஸ்க் பகுதியில் 15 வானூர்திகளும் தலைநகர் மாஸ்கோவுக்கு தெற்கே சில நூறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள லிப்பெட்ஸ்க் பகுதியில் ஒன்பது வானூர்திகளும் அழிக்கப்பட்டதாக டெலிகிராம் செயலியில் அமைச்சு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 30) கூறியது.

தென்மேற்கு ரஷ்யாவின் வோரோனெஸ், பிரையன்ஸ்க் பகுதிகள் ஒவ்வொன்றிலும் நான்கு வானூர்திகளும் அவற்றுக்கு அருகிலுள்ள ஓரியோல், பெல்கரோட் பகுதிகள் ஒவ்வொன்றிலும் இரண்டு வானூர்திகளும் அழிக்கப்பட்டன.

வானூர்தித் தாக்குதல்கள் காரணமாக எவருக்கும் காயமோ பொதுச் சொத்துகளுக்குப் பெருத்த சேதமோ ஏற்படவில்லை என லிப்பெட்ஸ்க், பிரையன்ஸ்க் ஆளுநர்கள் தெரிவித்தனர்.

Exit mobile version