Site icon Tamil News

கருங்கடல் மீது வட்டமிட்ட அமெரிக்க ட்ரோனை இடைமறித்த ரஷ்யா

கருங்கடல் மீது அமெரிக்க டிரோனை தங்கள் விமானம் இடைமறித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்தாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கருங்கடல் மீது டிரோனை சுட்டு வீழ்த்துவதற்காக ரஷ்ய விமானப்படை தனது SU 30 போர் ஜெட் விமானத்தை தயார் நிலையில் வைத்திருந்ததாகவும் இதையடுத்து எல்லையருகே வட்டமிட்ட அமெரிக்க டிரொன் திரும்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனின் வெடிபொருள் நிரம்பிய ஒரு டிரோன் ரஷ்யாவின் கிரீமியா பாலத்தின் அருகே சென்று கொண்டிருந்த எண்ணெய் டேங்கர் கப்பல் மீது தாக்கியதாகவும் உக்ரைன் ,ரஷ்யா இரு நாடுகளும் தெரிவித்துள்ளன.

Exit mobile version