Site icon Tamil News

ஜேர்மனியில் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள்!

ஜேர்மனியில் இந்தவாரம் மழையுடனான காலநிலை நிலவக்கூடும் என தேசிய வானிலை சேவை எச்சரித்துள்ளது.

இந்த வார தொடக்கத்தில் கணிசமான அளவு மழையுடன் கூடிய புயல்கள் நாட்டை தாக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதன்படி நேற்று கனமழை கொட்டித்தீர்த்துள்ளது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேற்கு நகரமான டியூஸ்பர்க்கில், வெள்ளம் சூழ்ந்த தெருக்களில் சிக்கிய கார்களில் இருந்து பலரை மீட்டதாக தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது.

வடக்கு நகரமான Braunschweig கிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகவும், சில் தெருக்கள் வெள்ளத்தில் மூழ்கியதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன.

Exit mobile version