Site icon Tamil News

பிரித்தானிய பல்கலைக்கழக மாணவர்களிடம் ரிஷி சுனக் முன்வைத்துள்ள கோரிக்கை!

பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் “antisemitic abuse” ஆண்டிசெமிடிக் துஷ்பிரயோகம் நிறுத்தப்பட வேண்டும் என பிரதமர் ரிஷி சுனக் அழைப்பு விடுத்துள்ளார்.

டவுனிங் ஸ்ட்ரீட்டில் உள்ள பிரதம மந்திரி அலுவலகத்தில் சுனக் மற்றும் அவரது கல்வி செயலர் பல்கலைக்கழக தலைவர்களை சந்திக்க தயாராகி கொண்டிருந்த போது இந்த கருத்துக்கள் வந்துள்ளன.

“எங்கள் வளாகங்களில் குரல் கொடுக்கும் சிறுபான்மையினர் தங்கள் சக மாணவர்களின் வாழ்க்கையையும் படிப்பையும் சீர்குலைக்கிறார்கள்.

சில சந்தர்ப்பங்களில், வெளிப்படையான துன்புறுத்தல் மற்றும் ஆண்டிசெமிடிக் துஷ்பிரயோகம் ஆகியவற்றைப் பிரச்சாரம் செய்கிறார்கள் என்றும் அவை நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாலஸ்தீனிய ஆதரவு எதிர்ப்பாளர்கள் கடந்த இரண்டு வாரங்களாக இங்கிலாந்தைச் சுற்றியுள்ள பல்கலைக்கழகங்களில் முகாம்களைக் கட்டத் தொடங்கியுள்ளனர்.

உதாரணமாக சமீபத்திய நாட்களில் ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் சுமார் ஒரு டஜன் முகாம்கள் கட்டப்பட்டுள்ளன.

இதுவரை நடந்த ஆர்ப்பாட்டங்கள் ஒப்பீட்டளவில் சிறியதாகவும் அமைதியானதாகவும் இருந்தன, ஆனால் சில யூத மாணவர்கள் யூத எதிர்ப்பு பற்றி கவலை தெரிவித்துள்ள நிலையில், போராட்டங்கள் பாரிய அளவில் முன்னெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

Exit mobile version