Site icon Tamil News

பிரான்ஸில் நகைக்கடையை திறந்த ஊழியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

பிரான்ஸில் நகைக்கடை ஒன்று உடைக்கப்பட்டு அங்கிருந்த 80,000 யூரோக்கள் பெறுமதியுள்ள நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது.

Chambourcy (Yvelines) நகரில் உள்ள Cleor எனும் புகழ்பெற்ற நகைக்கடையிலேயே இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரவு கடையினை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், நகைகளை கொள்ளையிட்டுக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

காலை 8 மணி அளவில் கடையின் ஊழியர்கள் கடையினை திறப்பதற்காக வருகை தந்த போது கடை உடைக்கப்பட்டிருப்பதை பார்த்துள்ளனர்.

அவர்களே பொலிஸாரை அழைத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

கொள்ளையிடப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு 80,000 யூரோக்கள் என முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Exit mobile version