Site icon Tamil News

அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குவது குறித்து நாமல் ராஜபக்ஷ விமர்சனம்!

இலாபம் ஈட்டிக் கொண்டிருக்கும் அரச நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சிகள் கவலைக்குரியது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குவது குறித்த அரசாங்கத்தின் நடவடிக்கை பற்றி கருத்து கூறிய அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது தொடர்ந்து பேசிய அவர்,   நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை இலாபகரமான வணிகங்களாக மாற்றுவதற்கு அவற்றை தனியார் மயமாக்குவது பற்றி சிந்திக்கக்கூடியதாக இருக்கும்.

அதேவேளை இலாபம் ஈட்டிக் கொண்டிருக்கும் அரச நிறுவனங்களை தனியார்மயமாக்குவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

இலாபகரமான அரச நிறுவனங்களை தனியார்மயமாக்க ஒரு முடிவு எடுக்கப்பட்டிருந்தால்,  அத்தகைய முடிவின் பின்னணியில் உள்ள காரணத்தைப் புரிந்துகொள்வது அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version