Site icon Tamil News

தற்கொலை செய்துகொள்ளத் தூண்டும் மத போதனை!! இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

சமூகத்தை சிதைக்கத் தூண்டும் நபர்களின் மத நம்பிக்கைகள் தொடர்பில் ஆராய அமைச்சரவைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன சமய கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், மத போதனைகளை திரித்து சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் செயல்களை தடுக்கவும் அகற்றவும் அரசு புதிய சட்டங்களை இயற்றும் என்றும் அமைச்சர் கூறினார்.

நாட்டின் சட்ட கட்டமைப்பிற்குள் ஒவ்வொருவரும் அவரவர் மதத்தை பின்பற்றக்கூடிய சூழலை உருவாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

அண்மையில் மத போதனையில் ஈடுபட்ட ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரின் குடும்ப உறுப்பினர்களும் தற்கொலை செய்துகொண்டனர்.

மேலும் அவரது மத பிரச்சார நிகழ்வுகளில் கலந்துகொண்ட இளைஞர் ஒருவரும் யுவதி ஒருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட நிலையில் மேலும் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்யை பெற்றுவருகின்றார்.

தற்கொலை செய்துகொள்ள தூண்டும் வகையில் இந்த மத போதனை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version