Site icon Tamil News

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து

தனமல்வில திஸ்ஸ பாதையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

பேருந்து மின்கம்பத்துடன் மோதி வீதியை விட்டு விலகிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த விபத்தில் யாருக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை.

விபத்து காரணமாக மின்கம்பம் முறிந்து விழுந்ததால், அப்பகுதியிலும், சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து காரணமாக அந்த வீதியில் பல மணிநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக நெத் நியூஸ் செய்தியாளர் தெரிவித்தார்.

Exit mobile version